மின்சாரம் இல்லை.. ஏ.டி.எம்.கள் கடும் பாதிப்பு.. சென்னை மக்கள் தவிப்பு !
சென்னையில் மின்சாரம் இல்லாததால் பல இடங்களில் ஏடிஎம்கள் மூடிக்கிடக்கிறது. இதனால் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
சென்னை: வர்தா புயல் பாதிப்பால் சென்னை நகரில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் பல ஏடிஎம்கள் முற்றிலும் முடங்கியுள்ளன. ஏற்கனவே பணம் இன்றி பல ஏடிஎம்கள் செயல்படாமல் இருந்த நிலையில் தற்போது மின்சாரமின்றி செயல்பட்டுக் கொண்டிருந்து ஒன்றிரண்டு ஏடிஎம்களும் செயல்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.
வர்தா புயல் காரணமாக ஏ.டி.எம். சேவைகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. சென்னையில் சுமார் 3200 ஏ.டி.எம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலான ஏ.டி.எம்கள் இயங்கவில்லை என்பதால் பணம் எடுக்க முடியாமல் சென்னை வாசிகள் தவித்து வருகின்றனர். மின்சாரம் இல்லாததாலும், நெட்வொர்க் பிரச்சினையாலும் ஏடிஎம்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மின்னனு பணப்பரிமாற்றத்தை அரசு ஊக்குவிப்பதாக கூறினாலும், வர்தா புயலுக்குப் பின்பு பெட்ரோல் பங்குகளில் டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த முடியாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சில்லறை தட்டுப்பாட்டை மெல்ல மெல்ல சமாளித்து வந்த மக்களுக்கு வர்தா புயல் மீண்டும் ஒரு பரிதவிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீண்டும் மூடிக்கிடக்கும் ஏடிஎம்களை எதிர்நோக்கும் சூழல் உருவாகியுள்ளது.
வர்தா புயல் ஏற்படுத்தி சென்ற சோகத்தில் இருந்து மக்கள் மீளாத நிலையில், பணம் இல்லாமல் அத்யாவசிய பொருட்களை வாங்க முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே கையில் இருந்த பணத்தை எல்லாம் வங்கிகளில் டெபாசிட் செய்துவிட்டு தற்போது ஏ.டி.எம்.களை நம்பிள்ள நடுத்தர சென்னை வாசிகளுக்கு ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளது மேலும் ஒரு துன்பமாக அமைந்துள்ளது.
-
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா?












Click it and Unblock the Notifications