For Daily Alerts
Just In
சேலம் சங்கர மடம் மீது தாக்குதல்.. ஜெயேந்திரர் பேனர் கிழிப்பு
சேலம் சங்கர மடத்தில் மர்மநபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சேலத்தில் ஜெயேந்திரர் பேனர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு-வீடியோ
சேலம்: சங்கர மடத்தில் மர்மநபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மரவனேரியில் சங்கரமடம் செயல்பட்டு வருகிறது. இங்கு மர்மநபர்கள் சிலர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் சங்கர மடத்தின் நுழைவு வாயில் மின்விளக்கு சேதமடைந்துள்ளது. மேலும் சேலம் சங்கர மடத்தில் உள்ள ஜெயேந்திரரின் பேனரும் கிழிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சங்கரமடத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார் என விசாரித்து வருகின்றனர். சங்கர மடத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments
English summary
Attack on Salem Sankara math. Jayendirar bannar tared and lights damaged in the sankara math.