திருவண்ணாமலையில் ஆசிரம நிர்வாகியை கட்டிப்போட்டு 25 சவரன் நகை, பணம் கொள்ளை!
ஆசிரம நிர்வாகியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: ஆசிரம நிர்வாகியை கட்டிப்போட்டு 25 சவரன் நகை மற்றும் 25 ஆயிரம் பணம் கொள்ளை போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள வருண லிங்கம் அருகே அமைந்துள்ளது திருவருட்பா ஆசிரமம்.
இந்த ஆசிரமத்தின் நிர்வாகியாக கலைமணி 77 என்பவர் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்றிரவு கலைமணி மற்றும் அவரது உதவியாளர்கள் ஆசிரமத்தில் இருந்தபோது, 5 பேர் கொண்ட மர்மகும்பல் ஒன்று திடீரென்று உள்ளே நுழைந்தது. பின்னர், கலைமணி மற்றும் அவரது உதவியாளரை கட்டிப்போட்ட அந்த கும்பல், 25 சவரன் நகை மற்றும் 25 ஆயிரம் ரொக்கப் பணத்தினை கொள்ளையடித்து தப்பி சென்றது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து கலைமணி கிராமிய போலீசாரிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கி, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications