தமிழகத்தில் தொடரும் மணல் கொள்ளையர்கள் அட்டகாசம்.. காஞ்சி அருகே அதிகாரி மீது கொலை முயற்சி
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தமிழகத்தில் தொடரும் மணல் கொள்ளையர்கள் அட்டகாசம்-வீடியோ
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் அருகே மணல் கொள்ளையை தடுத்த அதிகாரி மீது கொலை முயற்சி நடைபெற்றுள்ளது.
கூவத்தூர் அருகே வருவாய் ஆய்வாளர் சீனிவாசனை லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்த மணல் கடத்தல்காரர், தண்டபானி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த இரு தினங்கள் முன்பு, நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் ஜெகதீசன் என்பவர் மணல் கொள்ளையர்களால் அடித்தும், வெட்டியும் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவ பரபரப்பு அடங்கும் முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. மணல் கொள்ளையர்களை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுங்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக மக்கள் குமுறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications