முற்றும் மோதல்... கண்டனம் தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமாருக்கு குருமூர்த்தி பதிலடி!
தனது டிவிட்டுக்கு கண்டனம் தெரிவித்த ஜெயக்குமாருக்கு துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பதிலடி கொடுத்துள்ளார்.
Recommended Video

சென்னை: தனது டிவிட்டுக்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமாருக்கு துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பதிலடி கொடுத்துள்ளார்.
தினகரனின் ஆதரவாளர்களை 6 மாதத்துக்குப் பிறகு நீக்கியது குறித்து துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அதில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆண்மையற்றவர்கள் என அவர் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமாரும் ஆடிட்டர் குருமூர்த்தியின் டிவிட்டுக்கு கண்டனம் தெரிவித்தார். ஆண்மையில்லாதவர்கள் தான் இப்படி பேசுவார்கள் என்றும் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.

ஜெயக்குமார் கண்டனம்
அதிமுக நிர்வாகிகள் காங்கேயம் காளை போன்று இயக்கத்தை கட்டிக்காத்து வருவதாக அவர் கூறியிருந்தார். ஆடிட்டர் குருமூர்த்தி என்ன கிங் மேக்கரா என கேள்வி எழுப்பிய அமைச்சர் ஜெயக்குமார் எதற்கும் எல்லை உண்டு என்றும் டிடிவி ஆதரவாளர்கள் அனைவரும் தங்கள் எல்லையை உணர்ந்து பேசவேண்டும் என்றும் எச்சரித்திருந்தார்.

குருமூர்த்தி பதில்
இந்நிலையில் கண்டனம் தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமாருக்கு குருமூர்த்தி டிவிட்டர் வாயிலாக பதிலடி கொடுத்துள்ளார்.
ஈபிஎஸ் - ஓபிஎஸ் அரசுக்கு நான் ஆலோசனை வழங்குகிறேன் என்ற தவறான எண்ணத்தை நீக்கியதற்கு அமைச்சர் ஜெயக்குமாருக்கு நன்றி என அவர் தெரிவித்துள்ளார்.
|
தொடர்ந்து சொல்வேன்..
அவர்களை அரசாக நினைத்து நான் எப்போதும் ஆலோசனை வழங்கியதில்லை என அவர் கூறியுள்ளார். ஒரு எழுத்தாளராக கட்சிகள் குறித்து எனது கருத்துக்களை, அவர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தொடர்ந்து சொல்வேன் என்றும் குருமூர்த்தி தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.
|
புதிதாக சொல்லவில்லை..
மற்றொரு டிவிட்டில் துக்ளக் இதழில் கேள்வி பதில் பக்கத்தில் எடப்பாடி அரசு குறித்து இதுபோன்ற கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அதிமுக தலைமை பலவீனமானது என நான் புதிதாக சொல்லவில்லை என குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
|
மன்னார்குடி ஆதரவாளர்கள்..
மன்னார்குடி ஆதரவாளர்களுக்கு எதிராக அதிமுக தலைமை தவணை முறையில் நடவடிக்கை எடுத்தது என்றும் ஆர்.கே.நகர் தேர்தலை மன்னார்குடி ஆதரவாளர்கள் விலைக்கு வாங்கிய போதும், காவல்துறையால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அவர்களை பிடிக்காமல் பதிலுக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பணியை தொடங்கியது என்றும் குருமூர்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications