புளியரை அருகே பயங்கர விபத்து- ஆட்டோ மீது லாரி மோதியதில் 5 பேர் பரிதாப பலி
புளியரை: செங்கோட்டை அருகே புளியரையில் ஆட்டோ மீது லாரி மோதியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கற்குடி, லாலாகுடியிருப்பை சேர்ந்த 6 பேர் இன்று காலை 9.30 மணியளவில் புளியரையில் உள்ள தெட்சணாமூர்த்தி கோவிலுக்கு ஆட்டோவில் புறப்பட்டனர். ஆட்டோவை கற்குடியை சேர்ந்த டிரைவர் கருப்பசாமி ஓட்டினார்.
அந்த ஆட்டோவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முருகன்(38), அடிவெட்டி (60), கணகு (42), கருப்புசாமி (35) உள்ளிட்ட ஆறு பேர் வந்துள்ளனர்.

புதூர் என்ற இடத்தின் அருகே ஆட்டோ சென்றபோது எதிரே கேரளாவில் இருந்து வந்த லாரி எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.
இதில் ஆட்டோ சாலை ஓரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. ஆட்டோ டிரைவர் கருப்பசாமி, முருகன், மற்றும் 2 பெண்கள், ஒரு ஆண் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

பலியானவர்கள் உடலை செங்கோட்டையில் இருந்து வந்த தீயணைப்பு படையினர் மீட்டனர். விபத்து குறித்து செங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications