"மீ்ட்டர்" திட்டம் தோல்வி.. அடுத்த "மேட்டர்" ஆட்டோ வார்டன் – சென்னை போலீஸ் அறிமுகம்
சென்னை: சென்னையில் ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்தும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில் அதை மீண்டும் செயல்படுத்த "ஆட்டோ வார்டன்" என்ற புதிய திட்டத்தை போக்குவரத்து போலீசார் கையில் எடுத்து உள்ளனர்.
சென்னையில் கடந்த 2012 ஆகஸ்ட் 25 ஆம் தேதி ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நடைமுறைப்படுத்தப்பட்டு அதே ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் கட்டணப்படி மீட்டர் இயக்குவது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் ஆட்டோ ஓட்டுனர்கள் அதற்கு ஒத்துழைக்கவே இல்லை.

மீட்டர் இல்லாத ஆட்டோகளுக்கு சீல், அடையாள போஸ்டர் ஒட்டுதல் போன்ற நடவடிக்கைகள் எடுத்தும் இதுவரை ஆட்டோ மீட்டர் இயக்கம் சென்னையில் முழுமையாக அமலுக்கு வரவில்லை. இந்த நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கையாக "ஆட்டோ வார்டன்" என்ற திட்டத்திற்கு சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் தயாராகி வருகின்றனர்.
இத்திட்டத்தின் படி சென்னையில் போக்குவரத்து உதவி ஆணையரின் கீழ் உள்ள 12 உட்கோட்டங்களில் ஒரு உட்கோட்டத்திற்கு 10 ஆட்டோ ஓட்டுனர்கள் வீதம் 120 ஆட்டோ ஓட்டுனர்கள் தேர்வு செய்யப்படுவர்.
அவர்கள் மீது வழக்கு புகார் எதுவும் இருக்க கூடாது. தீய பழக்கங்கள் இல்லாதோராகவும் இருத்தல் அவசியம். ஒரு உட்கோட்டத்திற்கு 10 ஆட்டோ ஓட்டுனர்கள், ஒரு சட்டம் - ஒழுங்கு போலீசார், ஒரு போக்குவரத்து போலீசார் ஆகியோர் அடங்கிய "ஆட்டோ வார்டன் " குழு அமைக்கப்படும்.
இந்த குழு ஆட்டோ ஓட்டுனர்களை ஒருங்கிணைத்து மீட்டர் இயக்கம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தும். தேவைப்பட்டால் ஆட்டோக்களை கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸார் கடும் நடவடிக்கை எடுத்தும் கூட திருந்தாத ஆட்டோ டிரைவர்கள், எப்படி சக ஆட்டோ டிரைவர்கள் சொல்வதைக் கேட்பார்கள் என்று தெரியவில்லை. இது தலையை சுற்றி மூக்கைத் தொடும் கதையாக இருக்கிறதே....!
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications