சசிகலா புஷ்பா ஒரு சதிகாரி.. அவரின் கணவரை அப்படித்தான் அடிப்போம்.. ஆவடி குமார் ஆவேசம்
ராஜ்ய சபா எம்பி சசிகலா புஷ்பா ஒரு சதிகாரி என்றும் அவரது ஆதரவாளர்கள், அவரது கணவர் அதிமுக தலைமையகத்திற்கு வந்தால் அப்படித்தான் தாக்குவோம் என்று ஆவடி குமார் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுக தலைமையகத்திற்கு வந்த சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் அவரது வழக்கறிஞர் ஆகிய இருவரையும் அதிமுக தொண்டர்கள் தாக்கினார்கள். இது சரியானதுதான் என்றும் சதிகாரியான சசிகலா புஷ்பாவின் உறவினர்களை இதைவிட மென்மையாக தாக்க முடியாது என்றும் ஆவடி குமார் ஆவேசமாக கூறியுள்ளார்.
நாளை அதிமுகவின் பொதுக் குழு மற்றும் செயற்குழு கூட உள்ள நிலையில், இன்று திடீரென அதிமுக தலைமையகத்தில் அதிமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ராஜ்ய சபா எம்பி சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வருக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும், அவரது வழக்கறிஞருக்கும் சரியான உதை விழுந்தது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஆவடிக் குமார் கூறியதாவது:
சசிகலா புஷ்பா ஆதரவாளர்களிடம் இதைவிட எப்படி மென்மையாக நடந்து கொள்ள முடியும்? அதிமுக தொண்டர்கள் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் உள்ளனர். அதிமுக தலைமை அலுவலகத்தில் எந்தத் தலைவர்களும் இல்லை. தொண்டர்கள் மட்டும்தான் இருந்தார்கள். அந்த நேரத்தில் உள்ளே நுழைந்து ஆவணங்களை அவர்கள் கைப்பற்ற முயற்சி செய்துள்ளனர்.
அதிமுக தொண்டர்கள் எப்படி இதனை தாங்கிக் கொள்வார்கள். முழுக்க முழுக்க கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர்கள் சசிகலா புஷ்பா. இதுமட்டுமல்ல; திமுகவுடன் கள்ள உறவு வைத்துக் கொண்டு கட்சிக்கு கலங்கத்தை ஏற்படுத்தியவர். இதை எல்லாம் தாண்டி ஜெயலலிதாவை பற்றி ராஜ்ய சபாவில் மிகவும் கீழ்த் தரமாக பேசியவர். இப்படிப்பட்ட ஒரு சதிகாரியை எப்படி அணுக வேண்டும் என்று அதிமுகவினருக்கு தெரியும்.
அதிமுகவின் உள்விவகாரத்தில் தலையிடுவதற்கு சசிகலா புஷ்பா யார்? அவரது ஆதரவாளரையோ அல்லது உறவினரையோ எப்படி அதிமுக அலுவலகத்தில் அனுமதிக்க முடியும். சசிகலாவின் கணவர் யார்? யார் அவருக்கு கணவர்? அவருக்கு கட்சியில் என்ன பொறுப்பு இருக்கிறது. அவருக்கும் கட்சிக்கும் என்ன தொடர்பு? ஏன் அவர்கள் இங்கு வர வேண்டும் என்று ஆவடி குமார் கூறினார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications