கோரிக்கை நிறைவேறாவிட்டால் டெல்லியில் மே 25 முதல் விவசாயிகள் மீண்டும் போராட்டம்: அய்யாக்கண்ணு
தங்களது கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் டெல்லியில் மே 25-ந் தேதி முதல் மீண்டும் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் என அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார்.
சென்னை: விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக உரிய முடிவு கிடைக்காவிட்டால் மே 25-ந் தேதி முதல் டெல்லியில் மீண்டும் போராட்டம் நடைபெறும் என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வறட்சி நிவாரணம், விவசாயிகளின் வங்கி கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 41 நாட்கள் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பலவகை நூதனப் போராட்டங்களை நடத்தினர். ஆனால் மத்திய பாஜக அரசு இந்த விவசாயிகள் போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை.

நிர்வாணப் போராட்டம்
பிரதமர் மோடியை சந்திக்க அழைத்துச் செல்வதாக கூறி விவசாயிகளை அதிகாரிகள் ஏமாற்றினர். இதனால் பிரதமர் அலுவலகம் முன்பாக நிர்வாணப் போராட்டத்தை விவசாயிகள் நடத்த நாடே அதிர்ந்தது.

நிறைவேறாத கோரிக்கைகள்
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு வட இந்திய மாநில விவசாயிகளும் ஆதரவு தெரிவித்தனர். தமிழக அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் டெல்லி சென்று விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். ஆனாலும் கோரிக்கைகள் எதுவும் நிறைவேறவில்லை.

போராட்டம் ஒத்திவைப்பு
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் விடுத்த வேண்டுகோளை ஏற்று அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்தது. விவசாயிகள் அனைவரும் இன்று ரயில் மூலம் சென்னைக்கு திரும்பினர்.

எச்சரிக்கை
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விவசாயிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, தமிழக அரசியல் தலைவர்களின் நெருக்கடியைத் தொடர்ந்து 15 நாட்களில் முடிவை தெரிவிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அப்படி முடிவை தெரிவிக்காவிட்டால் டெல்லியில் மே 25-ந் தேதி முதல் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications