பேரணியை பத்தி கேக்குறன்னு சொல்லிட்டு இப்போ ஊரணியை பத்தி கேக்குறீங்க.. ஸ்டாலினை நக்கலடித்த அழகிரி!
ஸ்டாலினை ஊரணி எனக்கூறி முக அழகிரி நக்கலடித்துள்ளார்.
Recommended Video

மதுரை: ஸ்டாலினை ஊரணி எனக்கூறி முக அழகிரி நக்கலடித்துள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதிலிருந்தே கட்சிக்கு எதிரான கருத்துக்களையே அவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
தற்போது கருணாநிதி மறைவுக்கு பிறகு கட்சியில் தான் மீண்டும் இணைத்துக்கொள்ளப்படுவோம் என எதிர்பார்த்தார் அழகிரி. ஆனால் அதற்கான அறிகுறியே இல்லை.

இணைக்க வாய்ப்பில்லை
அண்மையில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் கூட ஸ்டாலின் ஆதரவாளர்கள் அழகிரிக்கு எதிராகவே பேசினர். இதனால் அழகிரி மீண்டும் கட்சியில் இணைக்கப்பட வாய்ப்பில்லை என தெரிகிறது.

செப்டம் 5ல் பேரணி
இதனால் அழகிரி ஸ்டாலின் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் வரும் செப்டம்பர் 5-ம் தேதி கருணாநிதி நினைவிடத்துக்கு பேரணி நடத்த அழகிரி திட்டமிட்டுள்ளார்.

அண்ணாசாலை டூ நினைவிடம்
இந்நிலையில் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த அழகிரி, செப்டம்பர் 5-ம் தேதி அண்ணா சாலை, வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலை யிலிருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடத்த இருக்கிறேன்.

எந்தக் கட்சியும் இல்லை
இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள். கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர் என்பதை அப்போது அனைவரும் புரிந்து கொள்வார்கள். எனது பின்னணியில் பாஜக உட்பட எந்தக் கட்சியும் இல்லை என தெரிவித்தார்.

ஆதங்கத்தை வெளிப்படுத்துவேன்
இதனால் திமுகவிலும் கருணாநிதியின் குடும்பத்திலும் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் முக அழகிரி செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, நேரம் வரும்போது எனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவேன்.

இணைப்பதாக தெரியவில்லை
சென்னையில் நடைபெறும் பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள். செப்டம்பர் 5 ஆம் தேதி பேரணிக்கு பிறகு அடுத்தகட்ட முடிவை அறிவிப்பேன். தற்போதைக்கு திமுகவில் என்னை இணைப்பதாக தெரியவில்லை" என்றார்.

ஸ்டாலின் ஊரணி
தொடர்ந்து ஸ்டாலின் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அழகிரி பேரணியை பற்றி கேட்கிறேன் என கூறிவிட்டு இப்போது ஊரணியை பற்றி கேட்கிறீர்களே என்று ஸ்டாலினை ஊரணி என நக்கலடித்தார் அழகிரி.
-
கடைசியில் ஒரு வழியா வருது.. சென்னை லூலூ மால்.. தொடங்குது கட்டுமானம்.. எங்கே வருது தெரியுமா? -
ஈரான் எதிர்பாராத அட்டாக்.. பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, பெரிய கேஸ் ஆலைகள் மூடல்! உலகிற்கே பாதிப்பு -
ராகுலுக்கு செக்.. செங்கோட்டையை நோக்கி ‘சூரியன்’.. ஸ்டாலினின் 3வது அணி ரெடி.. உடையும் இந்தியா கூட்டணி -
வேற யாராவதுன்னா ஜெயில்தான்.. விஜய்யை கட்டிப்போட்ட அந்த 25 பேஜ்.. அதிர்ச்சி தரும் 4 முக்கிய புகார்கள்! -
வாயை கூட திறக்காத சீனா.. ஈரான் விவகாரத்தில் ட்விஸ்ட் கொடுக்கும் ஜின்பிங்.. என்ன மேட்டர் தெரியுமா? -
99% எல்லாம் ஓவர்.. 24 மணி நேரம்தான் டைம்.. ராகுல் காந்திக்கு ஸ்டாலின் டெட் லைன்.. காங்கிரஸ் ஷாக் -
இஸ்ரேலை நோக்கி.. செஜில் வகை ஏவுகணைகளை வீச தொடங்கியது ஈரான்! ரொம்ப கஷ்டம்! -
தொடக்கூடாத கையைத் தொட்டதா ஈரான்? ஜப்பான் செய்த அதே தவறு.. 30 விநாடியில் மாறப்போகும் உலக வரைபடம்! -
ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்ததற்காக கார் ஓட்ட மறுத்தாரா டிரைவர்? வைரல் வீடியோவிற்கு விளக்கம் -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி பற்றி ரோகிணிக்கு தெரிந்த உண்மை.. வீட்டை விட்டு போன மீனா! முத்து எடுத்த முடிவு -
ஈரான் தாக்குதலில் தப்பிய இஸ்ரேல் பிரதமர்.. நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து பேட்டி! -
இந்திய அணி ஏமாற்றி வென்றுவிட்டது.. ஹெட்மயர் விக்கெட்டில் ஐசிசி தில்லு முல்லு.. முகமது ஆமீர் புகார்!












Click it and Unblock the Notifications