அழகிரியை அப்செட் ஆக்கிய நாகூர் திமுகவினர்...
நாகப்பட்டிணம்: நான் ஆட்சியில் இருந்தால் சிலர் வருவதும், இல்லாவிட்டால் போவதும் வாடிக்கை என்றாலும், என் மீது அன்பு கொண்டிருப்பவர்கள் மாறாத நட்பில் உறுதியாக இருக்கின்றனர். என் மீது அன்பு கொண்டவர்களிடம் நான் என்றும் மாறாத நட்பில் உறுதியாக இருப்பேன் என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி. நாகூரில் தி.மு.க. பிரமுகர் இல்லத் திருமண விழாவிற்கு வந்திருந்த அழகிரியை தி.மு.க.வினர் புறக்கணித்ததால் அப்செட் ஆன அவர் விரக்தியில் இவ்வாறு பேசினார்.
நாகை மாவட்டம் நாகூரில் தி.மு.க., பிரமுகர் ஷேக் தாவூத் இல்லத் திருமண விழா நேற்று நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் தி.மு.க.வின் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி கலந்து கொண்டார். அவர் வந்திருப்பதை அறிந்து தி.மு.க.வினர் தென்படாததால், 'அப்செட்' ஆன அழகிரி, மேடையில் சில நிமிடம் மட்டுமே மணமக்களை வாழ்த்திப் பேசினார்.

திருமண விழாவில் அழகிரி பேசும்போது, ''நட்புக்கு இலக்கணமாக விளங்கக் கூடியவர்கள் ஒரு சிலர் தான். நான் ஆட்சியில் இருந்தால் சிலர் வருவதும், இல்லாவிட்டால் போவதும் வாடிக்கை என்றாலும், என் மீது அன்பு கொண்டிருப்பவர்கள் மாறாத நட்பில் உறுதியாக இருக்கின்றனர். என் மீது அன்பு கொண்டவர்களிடம் நான் என்றும் மாறாத நட்பில் உறுதியாக இருப்பேன்" என்று தன்னைவிட்டு பிரிந்து சென்ற தி.மு.க.வினருக்கு குட்டு வைத்து பேசினார்.
அதன்பின் அவர் திருமண மண்டபத்தில் இருந்து புறப்பட்டபோது செய்தியாளர்கள் பேட்டி காண வந்தனர். அப்போது அழகிரி, ''தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது, அப்போது பார்க்கலாம். நான் எதுவும் சொல்லா விட்டாலும், சொல்லியதாக நீங்கள் ஏதாவது எழுத தான் போகிறீர்கள். நீங்களே எழுதிக் கொள்ளுங்கள்" என்று விரக்தியுடன் தெரிவித்துவிட்டு காரில் ஏறி கிளம்பிச் சென்றார்.
சமீபகாலமாக தி.மு.க.வில் அழகிரிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டாமல் உள்ளதால், இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. பிரமுகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அழகிரி புறப்பட்டுச் சென்ற தகவலை உறுதி செய்த பின்னரே தி.மு.க.வினர் ஒவ்வொருவராக திருமண மண்டபத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்தி சென்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications