அண்ணனுக்காக வனவாசம் செல்வோம்: அழகிரி ஆதரவாளர்கள் ஆதங்கம்

மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. வை கூண்டோடு கலைத்துவிட்டதாக தி.மு.க. பொதுச் செய லாளர் அன்பழகன் கடந்த சனிக்கிழமை அறிவித்தார். ஸ்டாலின் ஆதரவாளரான தளபதி தலைமையில் ஏழு பேர் கொண்ட பொறுப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவரைத் தவிர மற்ற அனைவருமே ஸ்டாலின் விசுவாசிகள்தான்.
கட்சித் தலைமையின் இந்த நடவடிக்கையால் அழகிரி வட்டா ராம் அப்செட்டில் இருக்கிறது. அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று ஆதரவாளர்கள் கேட்டதற்கு, ‘பொறுமையாக இருங்கள். 9-ம் தேதி மதுரை வந்ததும் பேசிக்கொள்ளலாம்'என்று மட்டும் சொல்லி இருக்கிறாராம் அழகிரி.
அழகிரிக்கு துணையாக
அழகிரி ஆதரவாளர்களின் தற்போதைய நிலைகுறித்து அழகிரி விசுவாசியும் கலைக்கப் பட்ட மாநகர் மாவட்ட தி.மு.க. பொருளாளருமான மிசா பாண்டியன், செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"இருபது வருடங்களுக்கு முன்பு ம.தி.மு.க. பிளவு ஏற்பட்டபோது தென் மாவட்ட தி.மு.க.வுக்கு எத்தகைய சோதனை வந்ததோ அதைப்போல இதுவும் எங்களுக்கு ஒரு சோதனை. அழகிரியுடன் இருப்பவர்கள் பதவி இல்லாவிட்டால் ஓடிவிடுவார்கள் என்ற சொல்லை பொய்யாக்கிக் காட்ட எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.
ராமாயணம் உதாரணம்
பரதனை அரியணை ஏற்ற வேண்டும் என்பதற்காக ராமனை வனவாசம் அனுப்பினார்கள். ராமனோடு லெட்சுமணனையும் காட்டுக்குப் போகச் சொல்லவில்லை. ஆனால், அண்ணனுக்கு துணையாக தம்பி லெட்சுமணனும் காட்டுக்குப் போனான். அதுபோல அண்ணன் அழகிரிக்காக நாங்களும் வனவாசம் செல்லத் தயாராகி விட்டோம்" என்று சொன்னார்.
மேலும் சில தகவல்களை பகிர்ந்து கொண்ட அழகிரி விசுவாசிகள், "கீழ்மட்ட தொண்டனை நெருங்காமல் மேல்மட்டத் தலைவர்களையும் வந்தேறிகளையும் வைத்துக் கொண்டு கட்சி நடத்துகிறார் ஸ்டாலின்.
தென் மண்டல அமைப்பு
வைகோ தொடங்கி பரிதி வரை கட்சிக்காக உழைத்த பலர், கட்சியை விட்டுப் போனதற்கு யார் காரணம்? தலைவருக்கு பின்னால் தகுதியான நபரின் தலைமையில் கட்சி வழிநடத்தப்பட வேண்டும் என்பதுதான் அழகிரியின் கவலை.
தென் மண்டல தி.மு.க. செயலாளராக இருக்கும் அழகிரி, தென் மண்டல தி.மு.க. கூட்டத்தை கூட்டவேண்டும். அதேசமயம் அவர் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று அவர்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications