தமிழக அரசின் பாராமுகம்.. பி.எட். படித்தும் வேலையின்றி தவிக்கும் கணினி ஆசிரியர்கள்
தமிழகம் முழுக்க 50,000க்கும் அதிகமான பி.எட் படித்த கணினி ஆசிரியர்கள் வேலையின்றி கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
சென்னை: தமிழகம் முழுக்க 50,000க்கும் அதிகமான பி.எட் படித்த கணினி ஆசிரியர்கள் வேலையின்றி கஷ்டப்பட்டு வருகிறார்கள். இவர்கள் பல்வேறு போராட்டம் நடத்தியும் கூட சரியான வேலைவாய்ப்பு இன்னும் உருவாக்கப்படவில்லை.
2011-ல் சமச்சீர் கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் 6 முதல் 10 வகுப்புகளில் கணினி அறிவியல் பாடம் ஒரு தனிப்பாடமாகக் கொண்டுவரப்பட்டது. இது பெரிய வேலை வாய்ப்பட்டு உருவாக்கும் என நம்பி கணினி துறையில் பெரும்பாலானோர் பி.எட். படித்தார்கள்.

ஆனால், ஆட்சி மாற்றத்தினால் இந்த திட்டம் கைவிடப்பட்டது. இதற்காக ரூ.300 கோடி செலவில் கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டன. எல்லாம் வீணாக போனதுடன், வேலை வாய்ப்பும் பறிபோனது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கணினி அறிவியலின் மேம்பாட்டுக்காக ரூ.900 கோடி நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுவும் சரியாக பயன்படுத்தப்படவில்லை.
தற்போது இதனால் 90,00,000 அரசு பள்ளி மாணவ-மாணவியரின் கணினிக்கல்வி பாதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் 50,000-க்கும் மேற்பட்ட கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதுகுறித்து வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தை சேர்ந்த மாநில இணை ஆசிரியர் ஜி.ராஜ்குமார் பேசும்போது ''எங்களுக்கு தனியார் பள்ளிகளிலும் வேலை கிடைப்பது இல்லை. கிடைக்கும் வேலைக்கு சரியான ஊதியம் கிடைப்பது இல்லை.'' என்றார்.
மேலும் ''நாங்கள் இதுகுறித்து தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் பலமுறை மனு அளித்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
அதேபோல் ''ஒவ்வொரு வருடமும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்படுகிறது. ஆனால் கணினி ஆசிரியர்களுக்கு எந்த நலத்திட்டமும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த வருடம் பிப்ரவரி மாதம் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கணினி ஆசிரியர்களுக்கு ஒரு நல்ல முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கிறோம்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு.. 67 ஆயிரம் வரை சம்பளம்! 10, 12 ஆம் வகுப்பு தகுதி தான் -
IT JOBS: நாளை மதியம் சென்னையில் இண்டர்வியூ.. HCL-லில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு.. செம சான்ஸ் -
திருப்பூரில் மத்திய அரசு பள்ளியில் வேலை.. மாதம் 57 ஆயிரம் வரை சம்பளம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான் -
IT JOBS: மார்ச் 14ல் பெங்களூரில் இண்டர்வியூ.. பணி சென்னையில் தான்.. HCL தரும் சூப்பர் சான்ஸ் -
RRB Group D: இந்தியன் ரயில்வேயில் 22,195 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 10 ஆம் வகுப்பு தகுதி தான் -
தமிழக அச்சுத் துறையில் வேலை.. மாதம் 57 ஆயிரம் வரை சம்பளம்.. 10ம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications