புரட்சி விதையின் முன்னோடி அம்பேத்கரின் 125வது பிறந்தநாள் – டூடுள் போட்டு கொண்டாடும் கூகுள்
சென்னை: இந்தியாவின் சமூக புரட்சியாளாரான அம்பேத்கரின் 125வது பிறந்தநாளை கூகுள் தன்னுடைய டுடூள் மூலமாக கொண்டாடி வருகின்றது.
சட்ட மேதை பாபா சாகேப் அம்பேத்கர் ஏப்ரல் 14 இதே நாளில் 1891 ஆம் ஆண்டு பிறந்தார்.
உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியரான இவர், லண்டன் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார்.

விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்:
விடுதலை அடைந்த பிறகு, நாட்டின் முதலாவது சட்ட அமைச்சரானார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கி தீண்டாமை ஒழியப் போராடியவர்.

சமூக நீதி புரட்சியாளர்:
பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர். ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதி புரட்சியாளராகவும் விளங்கியவர்.

திராவிட புத்தகத்தின் வித்து:
இவை அனைத்துக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசன வரைவுக் குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். "திராவிட புத்தகம்" என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்டவர் எனப்பட்ட தலித் மக்களை புத்த சமயத்தைத் தழுவச் செய்தவர்.

பாரத ரத்னா விருது:
இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான "பாரத ரத்னா" விருது 1990 இல் இவரது மறைவுக்குப் பின்னர் இவருக்கு வழங்கப்பட்டது.

கூகுள் கொண்டாடும் 125வது பிறந்தநாள்:
வரலாற்றின் பல சிறப்பு வாய்ந்த நிகழ்வுகளை அழகான ஓவியங்களாக மாற்றி தனது வலைதளத்தில் டூடுல் வைத்து வரும் கூகுள் இன்று அம்பேத்கரின் 125 ஆவது பிறந்த நாள் என்பதால் அம்பேத்கரின் உருவப்படத்தை டூடுலாக வைத்து அம்பேத்கரின் பெருமையை உலகிற்கு உணர்த்தியுள்ளது கூகுள்.












Click it and Unblock the Notifications