மாலைமுரசு அதிபர் பா.ராமச்சந்திர ஆதித்தன் உடல் அடக்கம்

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ராமச்சந்திர ஆதித்தன் நேற்று முன்தினம் சென்னையில் தனது வீட்டில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
அரசியல் தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் ராமச்சந்திர ஆதித்தன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து அவரது உடல் தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி கிராமத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு இன்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் ராமச்சந்திர ஆதித்தன் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications