மனைவியுடன் மனஸ்தாபம் – கொலை வழக்கு ஜாமீன் கைதி தூக்கு போட்டு தற்கொலை!
கோவை: சென்னையில் நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர் கோவையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை தேனாம்பேட்டை ஆலயத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துவேல் என்ற புஷ்மின். இவர் சென்னை மயிலாப்பூர் புளியந்தோப்பில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.
இவர் மீது மேலும் பல வழக்குகள் இருந்ததால் அவரது மனைவி தன் குழந்தைகளுடன் கோவை சிட்கோ சீனிவாச நகரில் தன் அக்கா வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று தன் மனைவியை பார்ப்பதற்காக முத்துவேல் கோவை வந்தார். அங்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் விரத்தியடைந்த முத்துவேல் மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜாமீனில் வெளிவந்த கைதி தற்கொலை செய்து கொண்டதால் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.