பாலச்சந்தர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்.. நினைவு திரும்பியது.. குடும்பத்தினர் மகிழ்ச்சி!
சென்னை: இயக்குநர் கே பாலச்சந்தர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு சுயநினைவு திரும்பி, குடும்பத்தினருடன் பேசுவதாகவும் அவரது உதவியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
இது பாலச்சந்தர் குடும்பம் மற்றும் திரையுலகினருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

கடந்த வாரம் உடல் நலக் கோளாறு காரணமாக மயிலாப்பூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கே பாலச்சந்தர். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், திரையுலகமே அவருக்காக கவலைப்பட்டது. ரஜினிகாந்த் நேரில் வந்து பார்த்து நலம் விசாரித்தார்.
சிறு நீரகம் பழுதடைந்ததால் அவருக்கு டயாலிஸிஸ் செய்யப்பட்டது. கடந்த இரு தினங்களாக அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. இப்போது அவருக்கு முற்றிலும் நினைவு திரும்பியுள்ளதாகவும், குடும்பத்தினர் இதனால் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் பாலச்சந்தரின் உதவியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications