கனமழை: குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடரும் தடை!
குற்றாலம் அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தொடருகிறது.
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பலத்த மழை பெய்வதால் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலத்தில் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சீசன் காலம். ஆனால் நடப்பாண்டில் சீசன் மந்தமாகவே இருந்து வருகிறது.

அவ்வப்போது திடீரென அருவிகளில் தண்ணீர் கொட்டுவதும் பின்னர் போக்கு காட்டுவதுமாக இருந்து வந்தது. ஆகஸ்ட் 15-ந் தேதியுடன் சீசன் பொதுவாக முடிவடையும்.
ஆனால் தற்போது மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை கொட்டுவதால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வியாழக்கிழமையும் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications