வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி... விவசாயிகள் தவிப்பு
நெல்லை: நெல்லை மாவட்ட பகுதிகளில் வாழைத்தார் விலை கடும் சரிவை சந்தித்துள்ளதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் பிரதான தொழில் விவசாயம். இந்த பகுதியை சேர்ந்த குறிப்பாக கிராமபபுறத்தை சேர்ந்த பொதுமக்கள் விவசாயத்தையே நம்பி இருக்கின்றனர். இதன் சுற்றுபுற பகுதியில் விளையும் வாழைத்தார்களுக்கு மவுசு அதிகம். இதன் பெரும்பாலான விவசாயிகள் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக வாழைகளை அதிக அளவில் சாகுபடி செய்கி்ன்றனர்.

இங்கு விளையும் ஏத்தன் ரக வாழைத்தார்கள் சிப்ஸ் தயாரிப்பதற்காக வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து வரும் வியாபாரிகளும் இந்த ஏத்தன் ரக வாழைத்தார்களை அதிக அளவில் கொள்முதல் செய்து கேரளாவுக்கு கொண்டு விற்பனை செய்து வருகின்றனர். இந்தாண்டு நெல் சாகுபடிக்கு முன்பாக அதிக அளவில் வாழைத்தார் பயிரிடப்பட்டது. கடந்த மாதம் அதன் அறுவடை தொடங்கியது. ஆரம்ப கட்டத்தில் ஒரு கிலோ வாழைத்தார் ரூ.23க்கு கொள்முதல் செய்யப்பட்டது. அதன் பிறகு அதன் விலை போக போக குறைய தொடங்கியது.
இந்த நிலையில் மாலை முதல் வாழைத்தார்கள் கிலோ ரூ.14க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாழைத்தார்களுக்கு உரமிடுவது, தண்ணீர் பாய்ச்சுவது, மருந்து தெளிப்பது, கம்பு கொடுத்து பாதுகாப்பது வரை பல செலவுகள் இருக்கின்றன. இந்த பகுதியை பொறுத்தவரை வங்கியில் கடன் வாங்கியும், நகையை அடகு வைத்தும் பலர் வாழைகளை பயிர் செய்துள்ளனர். இப்படி விலை இறங்கி விட்டதால் அவர்களில் பலர் கலக்கத்தில் உள்ளனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications