முழு அடைப்பு: தமிழகம் முழுவதும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் எதுவுமே ஓடவில்லை!
விவசாயிகளுக்கு ஆதரவாக நடத்தப்படும் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் எதுவுமே இயங்கவில்லை.
சென்னை: விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து கட்சி சார்பில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், லாரிகள் எதுவுமே இயங்கவில்லை.
வறட்சி நிவாரணம், விவசாயக் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் கடந்த 41 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் மத்திய அரசு தொடர்ந்து மௌனம் சாதித்து வந்தது.

இதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. இந்த நிலையில் திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இரண்டு முறை கூட்டப்பட்டது. அதில் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை நிர்பந்திப்பது, நீட் தேர்வில் இருந்து விலக்கு கோருவது , மாநிலம் முழுவதும் மதுவிலக்கு, அடிப்படை வசதிகள், குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்துவது, நெல், கரும்பு ஆகியவற்றுக்கு நியாயமான விலை நிர்ணயிக்க கோருதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வேலைநிறுத்த போராட்டம்...
மேலும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
முதல்வர் சந்திப்பு
இதனிடையே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்ற போது விவசாயிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களது கோரிக்கைகளை தாம் பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் உறுதி அளித்தார். இதனை ஏற்று விவசாயிகள் தமிழகம் திரும்பினர்.
தமிழகம் முழுவதும் பந்த்
இன்று காலை 6 மணிக்கு வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறா வண்ணம் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
வாகன போக்குவரத்து
போராட்டத்தை முன்னிட்டு லாரிகள், தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் எதுவுமே இயங்கவில்லை. சாலையில் போக்குவரத்து மிகவும் குறைவாக இருப்பதால் இரு சக்கர் வாகன ஓட்டிகள் மட்டுமே சாலைகளில் செல்வதை காண முடிகிறது.
-
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
விஜய் கட்சியால் எந்த பாதிப்பும் இல்லை.. திமுகவின் வெற்றி பிரகாசமா இருக்கு.. நேரடியாக சொன்ன சபரீசன்! -
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!












Click it and Unblock the Notifications