ஏ.டி.எம்களில் பாதுகாப்பு அலாரம் அவசியம் – வங்கி பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு!
சென்னை: தமிழ்நாட்டில் வங்கி ஏடிஎம்களில் எச்சரிக்கை அலாரம் பொருத்துவது உட்பட முக்கிய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வங்கி அதிகாரிகள் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். கூடுதல் கமிஷனர் கருணாசாகர், இணை கமிஷனர்கள் ஸ்ரீதர், சண்முகவேலு மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஏ.டி.எம் மையங்கள் பாதுகாப்பு குறித்து 10 கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டது.

வங்கி ஏ.டி.எம் மையங்களில் கண்டிப்பாக எச்சரிக்கை அலாரம் பொருத்த வேண்டும். ஏ.டி.எம் மையத்திற்கு வெளியிலும் கேமரா அமைக்க வேண்டும்.
இளம் வயதான காவலாளிகள்தான் பாதுகாவல் பணிக்கு அமர்த்தப்பட வேண்டும். 3 மாதத்திற்கு ஒரு முறை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட வேண்டும்.
பெரிய அளவில் ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் எடுத்துச்செல்லும்போது பலத்த பாதுகாப்போடு எடுத்துச்செல்லவேண்டும். பணம் எடுத்துச்செல்லும் ஊழியர்கள், குற்றப்பின்னணி இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.
அந்த ஊழியர்களை பணி அமர்த்தும்போது, அவர்கள் பற்றி போலீஸ் மூலம், தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பன போன்ற 10 அறிவுரைகளை கட்டளைகளாக வங்கி அதிகாரிகளுக்கு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications