சிறப்பு காவல்படையினர் முகாம்களுக்கு திரும்ப டிஜிபி டி.கே. ராஜேந்திரன் உத்தரவு
தமிழகத்தில் அனைத்து காவல் சிறப்பு படைகளும் தயாராக இருக்க போலீஸ் டி.ஜி.பி உத்தரவு
சென்னை: சென்னை: தமிழகம் முழுவதும் சிறப்பு காவல்படையினர் தங்களின் முகாம்களுக்கு திரும்பி தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தமிழக டிஜிபி டிகே ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக டிஜிபி டிகே ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகம் முழுவதும் உள்ள சிறப்பு காவல்படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக 19 மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

டிஜிபி ராஜேந்திரன் ஆணை
இந்த தகவலானது மாநாகர காவல்துறை ஆணையர், காவல் கண்காணிப்பாளர்கள் வழியாக அறிவுறுத்தப்படுகிறது.
அசாதாரண சம்பவங்கள் எதிர்பார்க்கப்படும் சூழலில் இத்தகைய உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது வழக்கம்.
அதேபோல் மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.க்களுக்கு டிஜிபி ராஜேந்திரன் ஆணை பிறப்பித்துள்ளார்.

முகாம்களுக்கு திரும்புங்கள்
அனைத்து சிறப்பு காவல்படை கம்பெனிகளும் தங்களது முகாம்களுக்கு திரும்பவும் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். போராட்டத்தை கட்டுப்படுத்த சென்றவர்கள் முகாம்களுக்கு திரும்புகின்றனர்.

வழக்கமான ஒன்றுதான்
சென்னை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் முகாம்களுக்கு திரும்ப டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
சிறப்பு காவல்படையினர் முகாம்களுக்கு திரும்புவது வழக்கமான நடவடிக்கையே என்று கூறப்பட்டுள்ளது.

19 மாவட்ட காவல்துறையினர்
காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம்,கடலூர், வேலூர் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பூர், நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் செப்டம்பர் 26ஆம் தேதி முகாம்களுக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தென் மாவட்ட காவல்துறை
இதேபோல மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் செப்டம்பர் 27ஆம் தேதி திரும்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அமைதிநிலையில் தமிழகம்
நீட் உள்ளிட்ட போராட்டங்களுக்காக பாதுகாப்பு பணிக்காக சிறப்புக் காவல்படையினர் நியமிக்கப்பட்டனர். தற்போது தமிழகம் அமைதி நிலைக்கு திரும்பி உள்ளதால் முகாம்களுக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications