இச்சைக்கு இணங்காத பிச்சைக்காரியை தூக்கில் தொங்கவிட்ட பிச்சைக்காரர்!
சேலம்: சேலத்தில் பிச்சைக்காரி கொலை வழக்கில் தேடப்பட்ட பிச்சைக்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் அழகாபுரத்தை அடுத்துள்ள காட்டூர் பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் இருந்த காலியிடத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஒரு பிச்சைக்கார பெண் ஒருவர் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
தூக்கில் தொங்கிய இடத்தில் மது பாட்டில் கிடந்தது. பக்கத்திலேயே இரண்டு பேர் மது அருந்தியதற்கான காலி கிளாஸ்களும் கிடந்தன. இதனால், அந்த பெண் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டனர்.
அக்கம், பக்கத்தில் உள்ளவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், தூக்கில் தொங்கிய பெண்ணுடன் இன்னொரு பிச்சைக்கார வாலிபரும் அந்தப்பகுதில் சுற்றிக்கொண்டு இருந்ததாக கூறியுள்ளனர்.
இக்கொலை தொடர்பாக அழகாபுரம் போலீசார் தனிப்படை அமைத்து, கொலையாளியை தேடி வந்தனர். சேலம் பகுதியில் சுற்றித்திரியும் சில பிச்சைக்காரர்களை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலில் பேரில் மேட்டூர் உழவர் சந்தை பகுதியில் பதுங்கியிருந்த பிச்சைக்கார வாலிபர் ஒருவரை பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது பெயர் மணிவாசகம் என்ற மணி என்பது தெரியவந்தது.
பழைய பேப்பர் பொறுக்கி வந்த மணிவாசகமும் அந்த பெண்ணும், ஒன்றாக சுற்றித்திரிந்துள்ளனர். நீண்ட நாட்களாக இருவருக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. இருவரும் ஒன்றாக மது குடிப்பது வழக்கம், குடித்துவிட்டால், அந்த பெண் மணிவாசகத்தை தரக்குறைவாக பேசி வந்துள்ளார்.
இது மணி வாசகத்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. சம்பவத்தன்று, இருவருக்கும் போதையில் தகராறு ஏற்பட்டதால், அந்தப் பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் கொலையை மறைக்கும் நோக்கத்தில் அந்த பெண்ணின் கழுத்தில் சுருக்கு மாட்டி கயிற்றில் கட்டி மரத்தில் தொங்கவிட்டுள்ளார். பிச்சைக்கார பெண்ணை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டாதால், அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications