மோடி கட்டிய வேட்டி.. 'ஐடியா' கொடுத்த தமிழிசை, வானதி!!
சென்னை: சென்னைக்கு நரேந்திர மோடி நேற்று வந்திருந்தபோது, அவர் கட்டிய வேட்டிக்குப் பின் ஒரு சின்ன சுவாரஸ்யக் கதை உள்ளது.
மோடி தனது சென்னை பயணத்தின்போது வேட்டி கட்டலாம் என்று தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்கள்தான் முடிவு செய்தார்களாம்.
அதிலும் பெண் தலைவர்களான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர்தான் முதல் முதலில் இந்த ஐடியாவைக் கொடுத்தார்களாம்.
மோடி இதற்கு முன்பு இரண்டு முறை தமிழகத்திற்கு வந்தபோதிலும், அவர் வேட்டி கட்டாமல் வழக்கமான தனது யூனிபார்மில்தான் வந்து போயிருந்தார். நேற்றுதான் அவர் முதல் முறையாக வேட்டிக்கு மாறியிருந்தார்.

பாரம்பரிய உடையில்
சென்னையில் நேற்று நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பிரசாரம் செய்து பேசினார். அப்போது அவர் தமிழக ஆண்களின் பாரம்பரிய உடையான வேட்டியில் காட்சி தந்தார்.

முதல் முறையாக
இதற்கு முன்பு இருமுறை அவர் தமிழகத்திற்கு வந்த போதும் அப்போது அவர் வேட்டி கட்டியிருக்கவில்லை. நேற்றுதான் முதல் முறையாக வேட்டி கட்டியிருந்தார்.

தமிழ்ப் புத்தாண்டுக்காக
இன்று தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுவதால் அவர் வேட்டிக்கு மாறியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

செலக்ட் செய்த பெண் தலைவர்கள்
நேற்று மோடி கட்டிய வேட்டிக்குப் பின்னால் ஒரு கதை உள்ளதாம். அதாவது தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பெண் தலைவர்கள்தான் இந்த வேட்டி ஐடியாவைக் கொடுத்தவர்களாம்.

தமிழிசை - வானதி
அதாவது தேசிய செயலாளர் டாக்டர் தமிழிசையும், வானதி சீனிவாசனும்தான் மோடி சென்னை கூட்டத்திற்கும், ரஜினி சந்திப்புக்கும் வேட்டி கட்டலாம் என்று ஐடியா கொடுத்தவர்களாம்.

ஆண்களுக்கு வேட்டி கட்டி அழகு பார்ப்பவர்கள் பெண்கள்தானே
ஆண்களுக்கு வேட்டி கட்டி அழகு பார்ப்பவர்கள் தமிழகப் பெண்கள். எனவே மோடியும் வேட்டியில் வந்தால், தமிழகப் பெண் வாக்காளர்களைக் கவர முடியும் என்ற எண்ணத்தில் இந்த ஐடியாவை தமிழிசையும், வானதியும் கொடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.

ராம்ராஜ் வேட்டியா.. மோடி வேட்டியா
அடுத்து மோடி அணிந்திருந்தது ராம்ராஜ் வேட்டியா என்று யாராவது வேட்டி மன்றம்.. அதாவது பட்டி மன்றம் வைத்துப் பேசினாலும் பேசலாம்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications