பெங்களூரு குண்டு வெடிப்பு எதிரொலி: சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

பெங்களூரு சர்ச் சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் முன் நடைபாதையில் இருந்த பூந்தொட்டியில் நேற்றிரவு 8.30 மணியளவில் குண்டு ஒன்று வெடித்தது. இதில் அப்பாதையில் சென்று கொண்டிருந்த இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டது. மூவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்டனர். தலையில் பலத்த காயமடைந்த சென்னையைச் சேர்ந்த பவானி சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் குறித்து பெங்களூரு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து, முக்கிய நகரங்களான மும்பை, டெல்லி, புனே மற்றும் சென்னையில் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications