தோழியுடன் இருக்க சீட் மாறி உட்கார்ந்து குண்டுவெடிப்பில் பலியான ஸ்வாதி
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பலியான ஸ்வாதி தனது தோழியுடன் இருக்க சீட் மாறி உட்கார்ந்து பலியாகியுள்ளது தெரிய வந்துள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பலியானவர் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ஸ்வாதி பரச்சூரி. பெங்களூர் டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்த ஸ்வாதி தன்னுடன் பணியாற்றிய தோழி ரஜிதாவுடன் சேர்ந்து கவுகாத்தி எக்ஸ்பிரஸில் நேற்று முன்தினம் மாலை பெங்களூரில் ஏறினார்.
ரயிலில் ஏறிய ஸ்வாதியும், ரஜிதாவும் அவரவர் இடத்தில் அமர்ந்திருக்க வேண்டும்.

சீட் மாற்றி
ஸ்வாதிக்கு எஸ்-5 பெட்டியில் 9ம் எண் கொண்ட இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரோ தனது தோழி ரஜிதாவுடன் இருக்க வேண்டும் என்பதற்காக 24ம் எண் கொண்ட சீட்டில் அமர்ந்துள்ளார். ரஜிதாவின் இருக்கை அதே பெட்டியில் எண் 23 ஆகும்.

அம்மா
ரயிலில் ஏறியவுடன் ஸ்வாதி தனது அம்மாவுக்கு போன் செய்து நான் ரயிலில் ஏறிவிட்டேன், அது விரைவில் கிளம்பிவிடும். நான் நாளை மதியம் 3 மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

ரஜிதா
குண்டுகள் வெடித்தபோது ஸ்வாதி தனது இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார். அவரது சீட்டுக்கு அடியில் குண்டு இருந்ததால் அவர் பலியாகியுள்ளார். குண்டு வெடித்தபோது ரஜிதா இருக்கையில் இல்லை. அவர் ஒன்று டாய்லெட்டிற்கு சென்றிருக்க வேண்டும் அல்லது சாப்பிட ஏதாவது வாங்க சென்றிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

பாட்டி
ஜனவரி மாதம் முதல் சம்பளம் வாங்கிய உடன் எனக்கு என்ன வேண்டும் என்று ஸ்வாதி கேட்டாள், நீ விரைவில் திருமணம் செய்துகொள் என்றேன் என அவரது பாட்டி ராஜலக்ஷ்மி தெரிவித்தார்.

பெற்றோர்
ஸ்வாதியின் அப்பா ராமகிருஷ்ணா ஒரு விவசாயி. அம்மா காமாக்ஷி தேவி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். ஸ்வாதியின் தம்பி பிரத்யும்மா மும்மை ஐஐடியில் ஏரோஸ்பேஸ் என்ஜினியரிங் படித்து வருகிறார்.

ஒயிட்ஃபீல்டு
ஸ்வாதி பெங்களூர் ஒயிட்ஃபீல்டில் உள்ள ராம் சாய் ஹைடெக் விடுதியில் தங்கியிருந்தார். அவரது அறையில் தெலுங்கானவில் உள்ள கொடாடாவைச் சேர்ந்த ரஜிதா தங்கியிருந்தார்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications