காரைக்குடி ராமநாதன் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சிறந்த மாணவர் விருது வழங்கும் விழா
காரைக்குடி: காரைக்குடியில் சிறந்த மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, இராம.சு. இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் காரைக்குடி ஆயுள் காப்பீட்டு கழகம் சார்பில் சிறந்த மாணவர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆயுள் காப்பீட்டு கழக மேலாளர் அருள் அவர்கள் தலைமை தாங்கி் சிறப்பித்தார்.

விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் தலைமையாசிரியர் பீட்டர் ராஜா அவர்கள் வரவேற்றார்.

விழாவில் பள்ளியில் பயிலும் எஸ். நாளிதா பானு, எம் .ஐஸ்வர்யா, பி.மாதேஷ், ஏவி.தருண் ஆகாஷ், எஸ்.தீபக் ஆகிய மாணவர்களுக்கு சிறந்த மாணவர்களுக்கான விருதை விழாத் தலைவர் வழங்கி சிறப்பித்தார்.

விழாவில் ஆயுள் காப்பீட்டு கழக உதவி மேலாளர் தங்கதுரை சிறப்புரையாற்றினார். முதன்மை காப்பீட்டு ஆலோசகர் லெ.கணேசன் கலந்து கொண்டார். விழாவிற்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் திருமதி. கோமதி ஜெயம் செய்திருந்தார். பட்டதாரி ஆசிரியர் திருமதி. விஜயலெட்சுமி நன்றி கூறினார்.












Click it and Unblock the Notifications