வந்தவாசியில் மகாகவி பாரதியாரின் 95-ஆவது நினைவு நாள் விழா
வந்தவாசி: வந்தாசியில் வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மகாகவி பாரதியாரின் 95-ஆவது நினைவு தின சிறப்புக் கவியரங்கம் வந்தவாசி எஸ்.ஆர்.எம். இன்போடெக் கணினிப் பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு, வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன் தலைமையேற்றார். பொருளாளர் எ.தேவா அனைவரையும் வரவேற்றார். கவிஞர்கள் பா.சீனிவாசன், வந்தை குமரன், எஸ்.கார்த்திகேயன், எ.மோகன்தாஸ், ஓசூர் ஷபி உள்ளிட்டோர் கவிதைகள் வாசித்தனர். வந்தவாசி சன்னதி மேல்நிலைப்பள்ளியின் ஓய்வுபெற்ற தமிழாசிரியர் நேமி.பாஸ்கரதாஸ், பாரதியின் சிறப்புகள் பற்றி உரையாற்றினார்.

வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் ஆலோசகர் கவிஞர் மு.முருகேஷ் 'பாரதி எங்கள் சாரதி' எனும் தலைப்பில் கவிதை உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: "மன்னர் வரலாற்றை மட்டுமே எழுதிக் கொண்டிருந்த தமிழ்க் கவிதையில், மக்கள் வரலாற்றையும் எழுதிய பெருமைக்குரியவன் பாரதி. அனைத்து உயிர்களும் சமம் எனும் பொதுவுடைமைச் சிந்தனையும், ஆணும் பெண்ணும் சமம் எனும் சமத்துவச் சிந்தனையும் உடையவர் பாரதியார். தனது பாடல்களில் சமூக விடுதலைக் கருத்துக்களை மிகுதியாய் பாடினார்.
ஆங்கிலேயர்களின் ஏதேச்சதிகார செயல்பாடுகளை தனது படைப்புகள் வழியாக சாடினார். முதன்முதலாக 'இந்தியா' எனும் இதழில் தான் கேலிச்சித்திரங்களை பாரதி வெளியிட்டார். 'ரெளத்திரம் பழகு' என்றும், 'அச்சமில்லை அச்சமில்லை...' என்றும் சமூக அநீதிகளுக்கு எதிராக போராடும் போர்க்குணமிக்க வரிகளைத் தந்த மகாகவி பாரதியின் சிந்தனைகளை நம் எண்ணத்தில் ஏந்தி, புதிய சமுதாயம் படைப்பதற்கான பயணத்தைத் தொடர்வோம்" என்று பேசினார். நிகழ்வில், கவிதை வாசித்த அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications