மாணவிக்கு புதுவை பள்ளி தாளாளர் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கு... சி.பி.ஐ.க்கு மாற்ற கோரிக்கை
புதுச்சேரி: புதுச்சேரியில் 9ம் வகுப்பு மாணவிக்கு பள்ளியின் தாளாளர் பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடரப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு வேண்டுமென புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர் கோ.சுகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கதிர்காமம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவியை அந்த பள்ளியின் தாளாளர் ரமேஷ் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்தது. இவ்விவகாரத்தில் ஆரம்பத்தில் போலீசார் ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்யாமல் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சமரசப்படுத்த முயன்றதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, இடதுசாரிக் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் தலையீட்டால் தன்வந்தரி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால்,தெற்குப் பகுதி போலீஸ் எஸ்.பி. வழக்குப் பதிவு செய்யாமல் புகாரை திரும்பப்பெறுமாறு பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரிடம் வலியுறுத்தி உள்ளார்.
மேலும், ரமேஷ் ஆளுங்கட்சிப் பிரமுகர் என்பதால், புதுச்சேரி அரசில் அவருக்கு மிகுந்த செல்வாக்கு உள்ளது. எனவே ரமேஷை காப்பாற்றும் முயற்சியில் புதுச்சேரி போலீசார் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி போலீசார் இவ்வழக்கை விசாரித்தால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கிடைக்காது.அதனால், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற புதுச்சேரி அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட ரமேஷை கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நிவாரணம் வழங்குவதோடு பாதுகாப்பும் அளிக்க வேண்டும். புதுச்சேரி அரசு இதனை நிறைவேற்றாவிட்டால் அனைத்துக் கட்சி மற்றும் சமூக அமைப்புகளை ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு சுகுமாரன் அறிக்கையில் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications