இந்தியாவுலயே, ஏன், இந்த வோல்டுலயே.. படகும் பைக்கும் ரோட்ல போற ஒரே ஊரு சென்னைதான்
சென்னை: நாட்டிலேயே, ஏன் இந்த வேல்டுலையே கார் வச்சிருக்க கரகாட்ட கோஷ்டி நம்ம கோஷ்டிதான்.. என்பது கரகாட்டக்காரன் திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபல வசனம். இப்போது சென்னை நிலைமை அப்படித்தான் உள்ளது. ஆனால் இங்கு கொஞ்சம் மாறுபட்ட நிலை.
சென்னையில் இதுவரை வடகிழக்கு பருவமழை காலத்தில் 48 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை இலாகா தெரிவித்துள்ளது. இந்த பெரும் மழை பொழிவு காரணமாக, சாலைகளில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது.
Only Possible In #Chennai
Bikes, Cars n Boat Plied on the same road.
#chennairains #ChennaiFloods @Ahmedshabbir20 pic.twitter.com/G48P87dbUR
— Imran Ahmedh KR (@theiakr) November 24, 2015
இதனால் தாழ்வான பகுதிகளிலுள்ள மக்கள் குட்டி படகுகள் மூலம் வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படுகிறார்கள்.
சாலையில் கார், பைக்கோடு சேர்ந்து படகும் செல்லும் காட்சியை ஒன்று டிவிட்டரில் பகிரப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும்தான், ரோட்டில், பைக், கார், படகு என மூன்றுவகை வாகனமும் செல்ல சாத்தியம் என அந்த டிவிட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.