தஞ்சை பாஜக வேட்பாளர் மீது தாக்குதல்: 30 பேர் காயம், கார்கள் உடைப்பு, படகுகளுக்கு தீ வைப்பு
பேராவூரணி: தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் மீது கல் வீசி தாக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு கலவரம் ஏற்பட்டது. இதில் பல கார்கள், பைக்குகள் அடித்து நொறுக்கப்பட்டன. ஒரு கார் குளத்துக்குள் தூக்கி வீசப்பட்டது. சில படகுகளும் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் வேட்பாளர் முருகானந்தம் உள்பட 30 பேர் காயமடைந்தனர்.
கருப்பு முருகானந்தம் நேற்று சேதுபாவாசத்திரம் ஒன்றிய பகுதியில் உள்ள கிராமங்களில் வாக்கு கேட்டு சென்றார். பேராவூரணி அருகே மல்லிப்பட்டினத்தில் பள்ளிவாசல் வழியாக ஊருக்குள் போக அவரது வாகனங்கள் திரும்பின.
அப்போது பள்ளிவாசல் முன்பாக கூடியிருந்தவர்கள் கருப்பு முருகானந்தமும் பாஜகவினரும் ஊருக்குள் வரக்கூடாது என தடுத்தனர். இதனை அந்த ஊர் ஜமாத் தலைவர்கள் கண்டித்தனர். ஓட்டு கேட்க வருகிறவர்கள் யாரையும் தடுக்கக்கூடாது என்றும் அனைவரும் அமைதியாக கலைந்து செல்லுமாறும் கோரிக்கை வைத்தனர். ஆனால், இதை அவர்கள் ஏற்கவில்லை.

இந் நிலையில் திடீரென சிலர் கூட்டத்தினர் மீது கற்களையும், பாட்டில்களையும், கட்டைகளையும் வீசினர். சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஒரு கார் பக்கத்தில் இருந்த குளத்திற்குள் தூக்கி வீசப்பட்டது. பல மோட்டார் சைக்கிள்களும் அடித்து நொறுக்கப்பட்டன.
இதில் வேடாபளர் முருகானந்தம், பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளர் அண்ணாதுரை உள்ளிட்ட 30 பேர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்த பட்டுக்கோட்டை தஞ்சாவூர் எஸ்பி தர்மராஜன், டிஎஸ்பி செல்லபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பள்ளிவாசலுக்கு உள்ளே இருந்தவர்களை வெளியேறுமாறு போலீசார் கோரினர். ஆனால், அவர்கள் வெளியே வர மறுத்துவிட்டனர்.

இதையடுத்து ஜமாத் பிரமுகர் தாஜூதீன் உள்ளே சென்று பள்ளிவாசலில் இருந்தவர்களை வெளியே செல்லுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து ஒவ்வொருவராக வெளியே வர தொடங்கினர். அவர்களை போலீசார் பிடித்து வேன்களில் ஏற்றினர்.
இதற்கிடையில் மல்லிப்பட்டினம் கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விசைப் படகுகளுக்கு யாரோ தீ வைத்துவிட்டு ஓடிவிட்டனர். தகவல் அறிந்து பேராவூரணி தீயணைப்புப் படையினர் சென்று தீயை அணைத்தனர்.
சம்பவத்தையடுத்து பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் அங்கு பிரசாரத்தை ரத்து செய்து விட்டு சேதுபாவாசத்திரம் வந்தார். அவருக்கு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications