தூத்துக்குடி மேயர் தேர்தல் - வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் பாஜக ஜெயலட்சுமி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி மேயருக்கான இடைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஜெயலட்சுமி இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக இருந்த சசிகலாபுஷ்பா மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதால் அங்கு மேயர் பதவிக்கு இடைத் தேர்தல் வந்துள்ளது

BJP candidate Jayalakshmi files nomination papers in Mayor poll

செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் அதிமுக சார்பில் அந்தோணி கிரேஸி போட்டியிடுகிறார். அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்து விட்டார். பாஜக சார்பில் ஜெயலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஜெயலட்சுமி இன்று தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரும் தேர்தல் அலுவலருமான மதுமதியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது.

இதேபோல் தூத்துக்குடி மாநகராட்சி காலியாகவுள்ள 37வது வார்டு தேர்தலில் அதிமுக வேட்பாளராக மாரிமுத்துவும் பாரதீய ஜனதா வேட்பாளராக ஆனந்தகுமாரும் போட்டியிடுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+