விஜயகாந்த் பிரச்சாரம் செய்யாததே படுதோல்விக்கு காரணம்: பாஜக வேட்பாளர் சுப்ரமணியன்
திருச்சி: விஜயகாந்த் பிரச்சாரம் செய்யாமல் போனதே பாஜகவின் படுதோல்விக்குக் காரணம் என்று ஸ்ரீரங்கம் தொகுதியின் பாஜக வேட்பாளர் சுப்ரமணியன் கூறியுள்ளார்.
பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வதை விஜயகாந்த் புறக்கணித்திருக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாஜக சொற்ப வாக்குகளையே பெற்று பரிதாப தோல்வியை சந்தித்துள்ளது. இந்த முடிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் வேட்பாளர் சுப்ரமணியன், கூறியதாவது:

விளக்கி சொன்னேமே
இடைத்தேர்தலில் பாஜக சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பிரச்சாரத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைத்தோம். மத்தியில் ஆளும் பாஜக அரசால் மக்களுக்கு என்னென்ன நன்மை கிடைக்கும் என்பதை விளக்கினோம்.
அவகாசம் போதவில்லை
ஸ்ரீரங்கத்தில் பாஜகவை வெற்றி பெறச் செய்தால் பிரதமரின் மாதிரி நகர திட்டத்தின் கீழ் ஸ்ரீரங்கம் தரம் உயர்த்தப்படும் எனக் கூறினோம். ஆனால், எங்களுக்கு பிரச்சாரம் செய்ய அவகாசம் போதவில்லை.
விஜயகாந்த் வரலையே
தேர்தல் பிரச்சாரத்தை விஜயகாந்த் புறக்கணித்திருக்கக் கூடாது. விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்ப்பு நிலவியது. அவர் எங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யாதது ஏமாற்றமே" என்று கூறியுள்ளார்.
கடைசி நேரத்தில்
ஸ்ரீரங்கம் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் முதல் ஆளாக திமுக வேட்பாளரை அறிவித்தது. அதிமுகவும் உடனடியாக வேட்பாளரை அறிவித்து படைகளை களமிறக்கியது. எல்லாவித பட்டுவாடாக்களும் முடிந்த பின்னர் கடைசியாக வேட்பாளரை அறிவித்தது பாஜக.
வாய் திறக்காத விஜயகாந்த்
தமிழக பாஜக தலைவர் தமிழிசைதான் தேசிய ஜனநாயகக்கூட்டணியின் ஆதரவு பெற்ற வேட்பாளர் என்று கூறினாரே தவிர கடைசி வரை விஜயகாந்த் வாயே திறக்கவில்லை. இதனால் தேமுதிகவினரும் குழம்பித்தான் போனார்கள். எனவேதான் தேமுதிகவினர் வாக்குகள் எதுவுமே பாஜக வேட்பாளருக்கு விழவேயில்லை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications