சென்னையில் பாஜகவின் 'ஒரு நோட்டு ஒரு ஓட்டு' பிரச்சாரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் பாஜக சார்பில் 'ஒரு நோட்டு ஒரு ஓட்டு' பிரச்சாரம் நடைபெற்றது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக பல யுக்திகளை கையாண்டு மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறது. அதன் ஒரு பகுதி தான் 'ஃபார் பி.எம். ஃபண்ட்'. இதற்கு தமிழக பாஜகவினர் 'ஒரு நோட்டு ஒரு ஓட்டு' என்று பெயரிட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் தென்சென்னை மாவட்ட பாஜக சார்பில் நேற்று தேனாம்பேட்டையில் 'ஒரு நோட்டு ஒரு ஓட்டு' பிரச்சாரம் நடந்தது. கட்சியின் மாநில செயலாளர் வானதி சீனிவாசன் துவக்கி வைத்த பிரச்சாரத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த வகை பிரச்சாரத்தின்படி வாக்காளர்கள் ஏதாவது ஒரு ரூபாய் நோட்டை அளித்தால் பாஜக பிரச்சாரக் குழு அவர்களுக்கு தாமரைச் சின்னம் உள்ள கூப்பனை வழங்கும்.












Click it and Unblock the Notifications