ஆர்கே நகரில் பாதாளம் வரை பாயும் பணம்- 3-வது இடத்துக்கு மல்லுக்கட்டும் நாம் தமிழர், பாஜக, சிபிஎம்
ஆர்கே நகரில் பணம் பாதாளம் வரை பாய்ந்து கொண்டிருப்பதால் 3-வது இடத்துக்கு நாம் தமிழர், பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றன.
சென்னை: ஆர்கே நகர் தொகுதியில் அனைத்து கட்சிகளும் சர்வ சாதாரணமாக பணத்தை இறக்கிவிட்டுள்ள நிலையில் 3-வது இடம் கிடைத்தால் கூட போதும் என்கிற நிலையில் நாம் தமிழர் கட்சி, பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் வீடு வீடாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.
ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக மற்றும் ஓபிஎஸ் அதிமுகவுக்கு இடையேதான் கடும் போட்டி என கூறப்படுகிறது. இந்த இருதரப்புக்கும் இடையேயான வாக்கு வித்தியாச சதவீத இடைவெளியை அதிகப்படுத்துவதன் மூலம் திமுக வெல்ல முடியும் என வியூகம் வகுக்கிறது.

வாக்கு சதவீத வித்தியாசம் குறையுமே
அதேநேரத்தில் ஓபிஎஸ் அணிக்கும் தினகரன் கோஷ்டிக்கும் இடையேயான வாக்கு சதவீத வித்தியாசம் மிக அதிகமாக இருக்கிறது. இதை சமாளிக்கத்தான் பணத்தை வாரி இறைத்து வருகிறாராம் தினகரன். இதனால் வாக்கு சதவீத வித்தியாசம் குறையலாம் என தினகரன் கோஷ்டி எதிர்பார்க்கிறது.

நாம் தமிழர் கங்கணம்
இந்த பெருமுதலைகளுக்கு மத்தியில் சிக்கிய கட்சிகளாக நாம் தமிழர், மார்க்சிஸ் மற்றும் பாஜக ஆகியவை உள்ளன. நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரையில் பாஜகவை விட கூடுதல் வாக்குகள் பெற்று நாம் மண்ணின் பிள்ளைகள் என்பதை நிரூபிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறது.

மாயாஜாலம் பேசும் பாஜக
பாஜகவோ கழகங்கள் இல்லாத தமிழகம் என்ற மாயாஜாலம் பேசிக் கொண்டு வீதி வீதியாக வலம் வருகிறது. ஆர்கே நகர் தொகுதி உழைக்கும் மக்களின் தோழர் என்ற நம்பிக்கையில் மார்க்சிஸ்ட் கட்சியின் லோகநாதன் வலம் வருகிறார்.

3-வது இடம் குறிக்கோள்
இந்த மூன்று கட்சிகளும் இப்போது 3-வது இடத்தை பிடித்துவிட்டாலே நமக்கு வெற்றிதான் என்கிற நம்பிக்கையில் இருக்கின்றன. ஆம் 3-வது இடத்துக்காகத்தான் இந்த 3 கட்சிகளும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications