கோஷம் எழுப்பினால் கைது... கேள்வி கேட்டால் அடி.. திரும்பத் திரும்ப பேசினால் தீவிரவாதி.. வாவ்!
சென்னை: கோஷம் எழுப்பினால் கைது செய்கிறார்கள், கேள்வி கேட்டால் அடிக்கிறார்கள், திரும்பத் திரும்ப பேசினால் தமிழ் தீவிரவாதி அல்லது அர்பன் நக்சல் என்கிறார்கள். பாஜக மீதான பிம்பமாக இது மக்கள் மனதில் பதிய ஆரம்பித்து விட்டது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு அடையாளம் உள்ளது. ஏதாவது ஒரு வகையில் தனது இருப்பை அது காட்டிக் கொண்டு வருகிறது. ஆனால் பாஜகவுக்கு அப்படி எதுவும் இல்லை. அரசியல் வெற்றிடத்தைப் பயன்படுத்தி தானும் நிலைத்து நிற்க அது கடுமையாக முயன்று வருகிறது.
ஆனால் அதற்காக அக்கட்சியினர் செய்யும் செயல்கள் எல்லாமே சர்ச்சையாகி விடுகிறது. சர்ச்சைகள் மட்டும்தான் பாஜகவா என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுகிறது.

துப்பாக்கிச் சூட்டில்
தூத்துக்குடி விமானத்தில் தமிழிசைக்கும் - மாணவி சோபியாவுக்கும் இடையிலான மோதல் அரசியலாக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் தமிழிசை காட்டிய பிடிவாதம் பெரும் விவாதங்களை எழுப்பியது.

விநாயகர் சதுர்த்தி
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று சைதாப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் ஒரு கூத்து நடந்துவிட்டது. இதிலும் தமிழிசை நடு நாயகமாக நின்றார்.

சிரித்தார்
செய்தியாளர்கள் சந்திப்பின்போது அங்கு வந்த ஆட்டோ டிரைவர் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார். இதையடுத்து அவரை பாஜகவினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். வெளியே கொண்டு போய் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. தமிழிசை தடுக்கவில்லை. மாறாக சிரித்தபடி நின்றிருந்தார்.

சமூகவிரோதிகள்
மறுபக்கம் எச். ராஜா விவகாரம். முதலில் காவல்துறை. ஹைகோர்ட்டை அசிங்கப்படுத்திப் பேசினார். நேற்று வேடசந்தூரில் மெரீனா, ஸ்டெர்லைட் போராட்டங்களில் ஈடுபட்டவர்களை தீவிரவாதிகள் என்று வர்ணித்தார்.

சிம்பிள் விளக்கம்
இன்னொரு பக்கம் எஸ்வி.சேகர் பெண் ஊழியர்களை விபச்சாரிகள் போல சித்தரித்து டிவீட் போட்டு விட்டு ஜாலியாக உலா வருகிறார். ஆக, பாஜகவினர் எது செய்தாலும் அது அமைதியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதேசமயம், மற்றவர்கள் கோஷமிட்டால் கைது, கேள்வி கேட்டால் அடி உதை, திரும்ப திரும்ப பேசினால் தீவிரவாதிகள் என்று கூறுவது பச்சை பாரபட்சமான செயலாக மக்களால் பார்க்கப்படுகிறது.
தாமரை மலர வேண்டும் என்றால் முதலில் தலைவர்களிடையே மன வளர்ச்சி வளர வேண்டும்.. பிறகு எல்லாமே தானாக நடக்கும் என்பது மக்களின் கருத்து.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications