சுப்பிரமணியம் சாமியை பாஜக அடக்கி வைக்க வேண்டும்: திருமாவளவன்
தக்கலை: தமிழர் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் சுப்பிரமணியம் சாமியை பாஜக தலைமை அடக்கி வைக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலைக்கு வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று சுப்பிரமணிய சாமி தொடர்ந்து பேசி தமிழர் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.

இப்படி செயல்பட்டு வரும் சுப்பிரமணிய சாமியை பாரதீய ஜனதா தலைமை அடக்கி வைக்க வேண்டும்.
மகாத்மா காந்தி உள்பட பல்வேறு தேசிய தலைவர்கள் விடுதலைக்காக பாடுபட்டிருக்கிறார்கள். காந்தி பிறந்த நாளை கொண்டாட வேண்டும்.
அதேபோல அம்பேத்கர் உட்பட ஏராளமான தேசிய தலைவர்களின் பிறந்த நாளை கொண்டாடுவது அரசின் கடமை. அதை தவிர்ப்பது ஏற்புடையது அல்ல. அதன் மூலம் இளைய தலைமுறைக்கு அவர்கள் செய்த தியாகம் தெரிய வரும் என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications