ஆர்கே நகர்.. தொடங்கியது தமிழிசையின் டிவிட்டர் பிரசாரம்.. 3 ஆண்டு பிரச்சினையை கையில் எடுத்தார்!
ஆர்கே நகருக்காக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டிவிட்டரில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
சென்னை: ஆர்கே நகருக்காக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டிவிட்டரில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் டிசம்பர் 21-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் திங்கள்கிழமை தொடங்குகிறது.

இதில் பல முனை போட்டி இருக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே தினகரன், அதிமுக போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில் இன்று திமுகவும் வேட்பாளரை அறிவித்துவிட்டது.
பாஜக வேட்பாளர் குறித்து அக்கட்சியின் மையக்குழு ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது பிரச்சாரத்தை டிவிட்டரில் தொடங்கியுள்ளார்.
ஆர்.கே நகர், சென்னி அம்மன் கோயில் குடியிருப்பு பகுதியில் சேதமடைந்த வீடுகளை 18 மாதத்திற்குள் புதிதாக கட்டி தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்து தற்போது 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. pic.twitter.com/JpgU008Rwa
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) November 24, 2017
அதாவது ஆர்.கே நகர், சென்னி அம்மன் கோயில் குடியிருப்பு பகுதியில் சேதமடைந்த வீடுகளை 18 மாதத்திற்குள் புதிதாக கட்டி தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். தற்போது 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என டிவிட்டி தனது திடீர் கரிசனத்தை காட்டியுள்ளார் தமிழிசை.












Click it and Unblock the Notifications