தேமுதிகவை தக்க வைக்க போராடும் பாஜக!

பாரதிய ஜனதா தலைமையில் தேமுதிக, மதிமுக, பாமக ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரு கூட்டணி உருவாக்கும் முயற்சிகள் தொடங்கின. இதில் பாஜக அணியில் மதிமுக இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுவிட்டது.
ஆனால் விஜயகாந்த் இருக்கும் கூட்டணியில் எப்படி இருப்பது? என கேள்வி கேட்டு பாமக பின்வாங்கியது. தேமுதிகவோ பாஜக, திமுக ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தது,
இதனால் திமுக அணியில் தேமுதிக இடம்பெறக் கூடும் எனக் கூறப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையே நடைபெறவில்லை என்று திமுக தலைவர்கள் பேசத் தொடங்கியிருக்கின்றனர்.
விஜயகாந்தோ, ஆம் ஆத்மியுடன் இணைந்து கூட்டணி அமைக்கலாமா என யோசித்து வருகிறாராம். இதனால் எப்படியாவது தங்களது அணிக்கு தேமுதிகவை கொண்டு வருவது என பாஜக முனைப்பு காட்டுகிறதாம்.
இதனால் தேமுதிகவுடன் இடைநிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தையை மீண்டும் பாஜக தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. தேமுதிக வெளியேறினால் பாஜக அணியில் இடம்பிடிக்கலாம் என கருதி பாமகவும் இப்போது பாஜக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறதாம்.
பிப்ரவரி 2-ந் தேதி உளுந்தூர்பேட்டை மாநாட்டில் தமது கூட்டணி பற்றிய முடிவை அறிவிப்பேன் என்று விஜயகாந்த் அறிவித்துள்ள நிலையில் தேமுதிகவை தக்க வைக்க கட்சிகள் 'போராட்டமே' நடத்திக் கொண்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications