'அந்த' வீடியோக்களை பார்த்ததை வெளியிடுவோம்.. இளைஞர்களை மிரட்டி பணிய வைக்கும் ப்ளூவேல் கும்பல்
இளைஞர்களை மிரட்டியே ப்ளூவேல் கேம் விளையாட்டில் ஈடுபடுத்துவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: ஆபாச வீடியோக்கள் பார்த்துள்ளதை வெளியிடுவோம் என மிரட்டியே இளைஞர்களை ப்ளூவேல் கேமில் விளையாட வைத்திருப்பது அம்பலமாகி உள்ளது.
உயிரை கொல்லும் கொடூர ஆயுதமாக விஸ்வரூபமெடுத்துள்ளது ப்ளூவேல் கேம். தற்போது தமிழகத்திலும் உயிரை குடிக்க தொடங்கியுள்ளது இந்த ப்ளூவேல் கேம்.
மதுரையில் விக்னேஷ் என்கிற கல்லூரி மாணவரை தூக்கிலிட வைத்தது ப்ளூவேல் கேம். இது தமிழகத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தற்போது ப்ளூவேல் கேம் தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், ப்ளூவேல் கேமில் ஈடுபட விரும்பாத இளைஞர்களை, நீங்கள் பார்த்த ஆபாச வீடியோக்களை பகிரங்கப்படுத்துவோம் என கூறி பலரையும் விளையாட வைக்கின்றன அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக தகவல் தெரிவித்த சைபர் கிரைம் அதிகாரி மல்லிகா, இது போன்ற மிரட்டல்களுக்கு இளைஞர்கள் அடிபணிய கூடாது. இது தொடர்பாக போலீசார், பெற்றோரிடம் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும் என்கிறார்.