கொடூர ப்ளூவேல், சக்திமான்.. இதுவரை இந்தியாவில் உயிர் குடித்த விளையாட்டுகள்
இந்தியாவின் இப்போதைய அதிர்ச்சி ப்ளூவேல் விளையாட்டுக்கு பலியாகும் சிறுவர்கள், இளைஞர்கள் என்பதுதான். இதே போல இந்தியாவின் குழந்தைகள் மற்றும், சிறுவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் என்று எல்லோரிடமும் பாதிப்ப
சென்னை: ப்ளூவேல் விளையாட்டு போல இந்தியாவில் குழந்தைகள் மற்றும், சிறுவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் என்று எல்லோரிடமும் பாதிப்பை உண்டாக்கி உயிர்பறித்த விளையாட்டுக்கள் நிறைய உள்ளன.
விபரீத விளையாட்டுக்கள் எப்படி வினையாகின்றன என்பதை பெற்றோருக்கும் இளைய தலைமுறையினருக்கும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
அதே போல சினிமாவில் ஹீரோக்கள் செய்யும் சாகசங்களைப்போல ரியலாகவும் செய்ய நினைத்து பல பேர் தங்களின் உயிரை இழந்த சம்பவங்கள் இந்தியாவில் நடந்துள்ளன. கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி மும்பை தொழிலதிபர் அப்படித்தான் உயிரிழந்துள்ளார்.

பாகுபலி போல சாகசம்
இந்திரபால் படேல் என்ற அந்த மும்பைத் தொழிலதிபர் மும்பையை அடுத்து 73 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் சஹாபூர் போர்ட்டில் இருக்கும் நீர்வீழ்ச்சி ஒன்றில் 'பாகுபலி' திரைப்படத்தில் காட்டப்படும் பிரபாஸ் போல அருவியைத் தாண்டிக் குதித்து அநியாயமாக உயிரிழந்திருக்கிறார்.

சக்திமான்
சில பத்து ஆண்டுகளுக்கும் முன்பாக, இப்படித்தான் ‘சக்திமான்' என்றொரு குழந்தைகளுக்கான தொடர் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. முகேஷ் கன்னா சக்திமானாக அதில் ஒரு விரலை உயர்த்திப் பிடித்துக் கொண்டு மந்திரம் உச்சரித்து தனக்குத் தானே சுழலும் பூமி போலச் சுற்றுவார்

உயிரழந்த சம்பவங்கள் அதிகம்
உடனே அவருக்குப் பறக்கும் சக்தி வந்து நினைத்த மாத்திரத்தில், நினைத்த இடத்திற்குச் சென்று விடுவார். இது அந்த தொடரில் வந்த காட்சி. இதைப் பார்த்து நிஜமென்று நம்பிய சிறுவர்களில் பலர் மொட்டை மாடியில் நின்று கொண்டு இதைப் பரீட்சித்துப் பார்த்து உயிரிழந்த சம்பவங்கள் நிறைய நடந்துள்ளன.
Recommended Video


3000 பேர் பலி
இன்றைக்கு உலக அளவில் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ப்ளு வேல் விளையாட்டிற்கு இதுவரை 3000 பேர் பலியாகியுள்ளனராம். தமிழகத்தில் முதல்பலி மதுரையில் நிகழ்ந்துள்ளது.

தேவை தனிமனித கட்டுப்பாடு
மொத்தத்தில் எத்தனை எச்சரிக்கை செய்யப்பட்டாலும் தனிமனித கட்டுப்பாடு என்ற ஒரு விஷயமும் உண்டு. மனிதர்கள் தங்களால் எதைச் செய்ய முடியும்? எது விபரீதத்தில் கொண்டு விடும்? என்பதை பகுத்துணரக் கூடியவர்களாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் இப்படிப்பட்ட விபரீதங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

இணையதள கண்காணிப்பும் அவசியம்
தனிமனிதர்கள் கைகளில் மொபைல் போன்கள் புழங்கும் சூழலில் அவர்களைக் கண்காணிக்கும் அல்லது அவர்கள் பயன்படுத்தும் இணயதளங்களை கண்காணிக்கும் நடவடிக்கை அவசியம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். அப்போதுதான் இது போன்ற கொடூர விளையாட்டுக்கள் தொடராது.
-
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
இந்தியாவின் நிலைமை மோசமாக போகுது! டிரம்ப் பார்த்த வேலையால் வந்த வினை! இப்படியா சிக்கல் வரனும்! -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்! -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு












Click it and Unblock the Notifications