மயிலாப்பூரில் பரபரப்பு.. கபாலீஸ்வரர் தெப்பக்குளத்தில் ஆண் பிணம் மிதந்தது!

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மயிலாப்பூர் காவல்நிலைய போலீசார், இது கொலையா? தற்கொலையா என்பது பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

மயிலாப்பூரில் உள்ள கற்பகாம்பால் உடனுறை கபாலீஸ்வரர் கோவில் உள்ளது. சென்னையில் பிரச்சித்த பெற்ற இந்த கோவிலில் தெப்பக்குளம் உள்ளது. இந்த குளத்தில் ஆண்டுக்கு ஒரு முறை தெப்பத்திருவிழா நடைபெறும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெப்பத்திருவிழா நடைபெற்றது.

Body found in Mylapore temple tank

இதற்காக தெப்பகுளம் சுத்தப்படுத்தப்பட்டது. தெப்பக்குளத்தில் ஏராளமான மீன்களும் வளர்க்கப்படுகின்றன. இந்த நிலையில் இன்று பிற்பகல் கோவில் தெப்பக்குளத்தில் ஆண் சடலம் ஒன்று மிதந்து வந்தது. இதைப் பார்த்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அடையாளம் தெரியாத அந்த நபரின் சடலம் கோவில் தெப்பக்குளத்திற்கு வந்தது எப்படி என்றும், கொலையா? தற்கொலையா என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+