சுபாஷ் பண்ணையார் கோஷ்டி மீது வெடிகுண்டு வீசிய 4 பேர் சரண்.

திண்டுக்கல், நந்தவனப்பட்டியில் கடந்த 2011, ஜனவரி 10ம் தேதி தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்புத்தலைவர் பசுபதிபாண்டியன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் தூத்துக்குடியை சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உள்பட 18 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இவ்வழக்கு விசாரணை திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
கடந்த 16ம் தேதி விசாரணைக்காக சுபாஷ் பண்ணையாரை தவிர 13 பேர் ஆஜராகி விட்டு கார்களில் தூத்துக்குடி திரும்பிக் கொண்டிருந்தனர். கொடைரோடு அருகே வரும் போது 25 பேர் கொண்ட கும்பல், கார்கள் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்கியது. வெடிகுண்டுகள் சாலையில் விழுந்து வெடித்ததால் 13 பேரும் காயமின்றி தப்பினர்.
இது தொடர்பாக நெல்லை அருகே ராமையன்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் (19) என்ற கோடி, மேலக்கடை விஜயபாண்டி (23) என்ற கவுசிபாண்டியன், தச்சநல்லூரை சேர்ந்த எஸ்டேட் மணி (30) ஆகிய 3 பேரை போலீசார் கன்னிவாடி அருகே மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் பசுபதிபாண்டியன் கொலைக்கு பழிக்கு பழி வாங்க சுபாஷ்பண்ணையார் கோஷ்டியை சேர்ந்தவர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியது தெரியவந்தது.
இந்நிலையில் வெடிகுண்டு வீசியது தொடர்பாக போலீசாரால் தேடப்பட்டு வந்த மதுரை அனுப்பானடியை சேர்ந்த ராமர் (28), மதுரை திருவேங்கடத்தை சேர்ந்த ராஜா (28), திண்டுக்கல் ஒட்டுப்பட்டி ஜெகவீரன் (25), தென்காசி நன்னகரம் கனி (28) ஆகிய 4 பேர் தென்காசி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். 4 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் ஜெகதீஸ்வரி உத்தரவிட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications