For Daily Alerts
Just In
சென்னையில் தனியார் பள்ளி அருகே நாட்டு வெடிகுண்டு கிடந்ததால் பரபரப்பு
சென்னை: சென்னை வியாசர்பாடி பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே நாட்டு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடி பி.வி. காலனியில் தனியாருக்கு சொந்தமான நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் அருகே சாலையோரத்தில் வெடிகுண்டு கிடப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து உடனடியாக எம்கேபி நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டை கைப்பற்றி அதை செயலிழக்க செய்தனர். மேலும் இது தொடர்பாக எம்கேபி நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சரியான நேரத்தில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டு செயலிழக்கச் செய்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது என அப்பகுதியினர் தெரிவித்துனர்.
Comments
English summary
Bomb found in private school near Vyasarpadi immediatley Bomb experts were to fail to grab the bomb.
Story first published: Saturday, January 9, 2016, 3:05 [IST]