சென்னை: ஆவடி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்த சம்பவத்தின் பரபரப்பு இன்னும் அடாங்காத நிலையில் ஆவடி ரயில் நிலையத்தை குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

நேற்று காலையில்தான் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த குவஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுகள் வெடித்தன. இதில் 22 வயதான ஸ்வாதி என்ற பெண் உயிரிழந்தார். 14 பேர் காயமடைந்தனர்.

Bomb threat to Aavadi railway station

இந்த நிலையில் ஆவடி ரயில் நிலையத்தைக் குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக ஒரு மிரட்டல் வந்துள்ளது. ஆவடி ரயில் நிலையத்திற்கு வந்த அந்த தொலைபேசி அழைப்பில் பேசிய நபர், ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்போவதாக மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் போனது. தொடர்ந்து போலீஸார் மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்களுடன் ஆவடி ரயில் நிலையத்தில் சோதனையிட்டனர். கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இது வெடிகுண்டு புரளியாகத்தான் இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஒரு ரூபாய் காயின் போட்டு பேசும் போனிலிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சென்ட்ரல் குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த தொலைபேசி அழைப்பு சீரியஸாக எடுத்துக் கொண்டு போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+