சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலகம், அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அரக்கோணம் ரயில் நிலையம், துணை எஸ்.பி. அலுவலகம், எம்.எல்.ஏ. அலுவலகம் ஆகியவற்றுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை சேத்துப்பட்டு ஸ்பெக்ட்ரஸ் ரோட்டில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகே ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பத்திரிக்கை அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்திற்கு சனிக்கிழமை கடிதம் ஒன்று வந்தது.

அதில், இந்து துவேசத்தை நீங்கள் கடைபிடிக்கிறீர்கள். அதனால் உங்கள் அலுவலகத்தை குண்டு வைத்து தகர்ப்போம் என்று எழுதப்பட்டிருந்தது. கடிதம் ஐஎஸ்ஐஎஸ் பெயரில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரக்கோணம் ரயில் நிலைய மேலாளர் சிவசங்கரனுக்கு கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது,
அரக்கோணத்தில் உள்ள ரயில் நிலையம், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், எம்.எல்.ஏ. அலுவலகம் மற்றும் எம்.எல்.ஏ.வின் வீடு, ஒருங்கிணைந்த நீதிமன்றம், டவுன் காவல் நிலையம் உள்பட முக்கிய இடங்கள் விரைவில் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும்.
மாவோயிஸ்டு தீவிரவாதிகள், இந்த தாக்குதலை நடத்த சதித்திட்டம் தீட்டியுள்ளனர். பனப்பாக்கம், நெமிலி வழியாக அரக்கோணத்திற்குள் தீவிரவாதிகள் புகுவதை யாராலும் தடுக்க முடியாது. நெமிலி காவல் நிலையமும் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும். வெடிகுண்டு தாக்குதல் திட்டத்தை முடிந்தால் முறியடிக்கவும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு கடிதங்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications