மோடி பிரதமரானால் கோயில்களை தகர்ப்போம்: த.மு.க. பெயரில் மிரட்டல்!
திருவண்ணாமலை: டீக்கடைக்காரர் மோடி பிரதமரானால், தமிழகத்திலுள்ள கோயில்களை குண்டு வைத்து தகர்ப்போம் என த.மு.க. என்ற பெயரில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு செவ்வாய்கிழமையன்று வந்த கடிதம் ஒன்றில், ''டீக்கடைக்காரர் மோடி பிரதமரானால் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு குண்டு வைப்போம் என்று கூறப்பட்டிருந்தது.
வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவில், மேல்மருவத்தூர் கோயில் உள்பட தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களை குண்டு வைத்து தகர்ப்போம் இப்படிக்கு பிலால் மாலிக், த.மு.க.'' என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, கோயிலின் இணை ஆணையர் திருமகள், நகர காவல் நிலையத்தில் இன்று (16ஆம் தேதி) புகார் அளித்தார். புகாரின் பேரின் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தமிழகத்திலுள்ள முக்கிய கோயில்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications