ஹலோ போலீஸ் கண்ட்ரோல் ரூமா? பாம் வச்சிருக்கேன்… மிரட்டல் விடுத்த மர்ம ஆசாமி
சென்னை: நடுரோட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது வெடிக்கப்போவதாகவும் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம ஆசாமி பேசிய தொலைபேசியால், விடிய விடிய போலீசார் தூங்காமல் வெடிகுண்டை தேடியுள்ளனர்.
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இரவு 11.30 மணியளவில் ஒரு போன் வந்தது. அதில் பேசிய மர்ம ஆசாமி, நான் உளவுத்துறையில் இருந்து பேசுகிறேன். கதீட்ரல் சாலை, எல்டாம்ஸ் சாலை இடையே வெடிகுண்டு இருக்கிறது.

உடனடியாக போக்குவரத்தை நிறுத்தி பொதுமக்களை காப்பாற்றுங்கள் என கூறிவிட்டு போனை துண்டித்து விட்டான்.
இதையடுத்து சென்னை மாநகர போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இரவு 1 மணி வரை கதீட்ரல்- எல்டாம்ஸ் சாலை வரை தீவிர சோதனை நடத்தப்பட்டது. அந்த சாலையில் போக்குவரத்து மாற்றப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள், துப்பறியும் நாய் ஆகியவற்றுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
வெடிகுண்டு மிரட்டல் அழைப்பால் நள்ளிரவில் சென்னையில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு காணப்பட்டது. முழுமையான சோதனைக்கு பிறகு வெடி குண்டு மிரட்டல் விடுத்தது வெறும் புரளி என உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் மிரட்டல் விடுத்தது யார் எங்கிருந்து அந்த அழைப்பு வந்தது, நள்ளிரவில் போலீசின் தூக்கத்தை கெடுத்த மர்மநபர் யார் என்று சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications