பணபலமும் அதிகார பலமும் கொண்டவர்கள் அனைவருமே எனக்கு எதிரிகள் தான் : ஜெ.தீபா பேட்டி
பணபலமும், அதிகார பலமும் கொண்ட வேட்பாளர்கள் அனைவருமே தனக்கு போட்டியாளர்கள் என்று தீபா தெரிவித்து உள்ளார்.
சென்னை : ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வருகிற டிசம்பர் 21ம் தேதி நடக்கிறது. அதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்றோடு முடிவடைவதாக தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று சுயேட்சையாக பலர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்து இருந்தனர். அதில் நடிகர் விஷாலும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆகியோரும் மனுத்தாக்கல் செய்தனர்.
மனுத்தாக்கலுக்குப் பிறகு ஜெ.தீபா பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், தான் அரசியலுக்காகப் போட்டியிடவில்லை என்றும், மறைந்த தனது அத்தை ஜெயலலிதாவிற்காக மட்டுமே போட்டியிடுவதாகவும் பதிலளித்தார்.
இந்தத் தேர்தல் முறையாக நடக்குமா என்று கேள்வி எழுந்துள்ளதாகவும், ஜனநாயகத்தை காப்பாற்ற ஆர்.கே நகர் மக்கள் ஜெயலலிதாவிற்காக தனக்கு வாக்களிக்க வேண்டும் என்றார். மேலும், இந்தத் தொகுதிக்காக ஜெயலலிதா செய்ய வேண்டிய கடமைகளை தான் ஆற்ற தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
வேட்புமனுத்தாக்கல் செய்துள்ள 134 பேரில் பண பலத்தையும், அதிகார பலத்தையும் பயன்படுத்தும் அனைவரும் எனக்கு எதிரி தான். இது இரண்டும் இல்லாமல் களத்தில் இருப்பது நான் மட்டும் தான். டி.டி.வி தினகரனை நான் ஒரு போட்டியாகவே கருதவில்லை. தி.மு.க., அ.தி.மு.க இரண்டு கட்சிகளுமே எனக்கு எதிரி தான். அதிலும் அ.தி.மு.க எனக்கு முக்கிய எதிரி என்று ஜெ.தீபா தெரிவித்து உள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications