பூவனூர் அருகே தண்டவாளத்தில் விரிசல்; மன்னார்குடி - மானாமதுரை ரயில் நடுவழியில் நிறுத்தம்

Subscribe to Oneindia Tamil

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் விரிசலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மன்னார்குடி, பூவனூர் அருகே காலை நேரத்தில் கடந்து சென்ற பொதுமக்கள் சிலரால் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து பதட்டமடைந்த மக்கள் உடனடியாக ரயில்வே ஊழியர்களுக்கு தகவர் அளித்தனர்.

Breakage in Mannargudi track; trains stopped

இதனையடுத்து விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் விரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மன்னார்குடி- மானாமதுரை ரயில் பூவனூர் அருகேயே தடுத்து நிறுத்தப்பட்டது.

இதனால் பயணிகள் பதட்டத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனினும், முன்னதாகவே விரிசல் கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.ஏற்கனவே கடந்த வருடம் செப்டம்பரில் சென்னை- மங்களூர் ரயில் ஒன்று இதே பூவனூர் அருகே தடம் புரண்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+